விஜய்க்கான இடம் மக்கள் நீதி மய்யத்தில் உள்ளது.. நடிகர் கமல் அழைப்பு!
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் மக்கள் நீதி மய்யத்தில் அவருக்கான இடம் காத்திருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் மக்கள் நீதி மய்யத்தில் அவருக்கான இடம் காத்திருக்கிறது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இரண்டு வாரம் முன் நடிகர் விஜய் சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில் தன்னுடைய அரசியல் ஆசை குறித்து பேசினார்.
[ரஜினி, கமலுக்கு பதிலடி.. விஜய்க்கு குறி வைக்கிறதா திமுக?.. அதிரடி திட்டம்!]
தற்போது இதுகுறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பேன். அவர் கிட்ட போய் அவருடைய விருப்பம் குறித்து பேசணும். எதற்காக அரசியலுக்கு வருகிறார் என்று கேட்கவேண்டும். கோபம் காரணமாக அரசியலுக்கு வர விருப்பமா என்று கேட்பேன்.
[தேவர் மகன் 2.. இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது ஏன்.. அரசியல் ஆதாயம் தேடுகிறாரா கமல்?]
அவரை கட்சிக்கு வாங்கன்னு இழுக்க முடியாது. அவர் என் தம்பி. என்னிடம் நிஜம் பேசுவார். வரணுமா வேண்டாமா என்று அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
அவர் வர முடிவு செய்தால் கட்சியில் இடம் உண்டு. அவருக்கான இடம் மக்கள் நீதி மய்யத்தில் காத்து இருக்கிறது என்று கமல் கூறிள்ளார்.