அதிமுக மா.செ கூட்டம்.. சிரிப்பா சிரிச்சோம்.. ராஜேந்திர பாலாஜி ஹாஹாஹா பதில்!
Recommended Video
சென்னை: அதிமுக கூட்டத்தில் நடந்தவை என்ன என்பது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது. கட்சியில் இரண்டு தலைமை இருப்பதால் முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் யாரிடம் அதிகாரம் உள்ளது என்பது தெரியவில்லை என்றும் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கருத்து தெரிவித்தார்.
இதே கருத்தையே கட்சியின் நிர்வாகிகள் பலரும் கூறினர். மேலும் கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்றும் நிர்வாகிகளும் அதிமுக எம்எல்ஏக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதிமுக கூட்டம் நிறைவு.. உள்ளாட்சி தேர்தல்.. உட்கட்சி பிரச்சனை குறித்து காரசார விவாதம் என தகவல்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
இதைத்தொடர்ந்து இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்பிக்கள், மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்ற கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
சிரித்துக்கொண்டே வந்தோம்
அப்போது கூட்டத்திற்கு சிரித்துக் கொண்டே சென்றோம், சிரித்துக் கொண்டே வெளியே வந்தோம் என்றார். தற்போது உள்ள தலைமை அடிப்படையில் செயல்பட கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
ஒற்றை தலைமை - பேசவில்லை
மேலும் ராஜன் செல்லப்பாவும் அதை ஏற்றுக் கொண்டார் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பாக பேசவில்லை என்றும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
தேர்தல் வெற்றி
அதிமுக பொதுக்குழு குறித்து முதல்வர், துணை முதல்வர் முடிவெடுப்பார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் தேர்தல் வெற்றி குறித்தும் வரும் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும் விவாவதிக்கப்பட்டது என்றும அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.