சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சக மனிதனின் வாயில் மலத்தை திணிப்பது பைத்தியகாரத்தனத்தின் உச்சம்.. திருமாவளவன் ஆவேசம்!

Google Oneindia Tamil News

சென்னை: சக மனிதனின் வாயில் மலத்தை திணிப்பது பைத்தியகாரத்தனத்தின் உச்சம் என விடுதலை சிறுத்தைகள் கட்சிதி தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதி படுகொலை மற்றும் திருவாடுதுறை சாதிய வன்கொடுமையை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Thirumavalavan condemns the cast issue in Thiruvadudurai

இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திலகவதி சாதி ஆணவப் படுகொலை குறித்து, சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தினார்.

அவர் மேலும் பேசியதாவது, திலகவதியின் குடும்பத்தினருக்கு அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். திருவாடுதுறை கொல்லிமலை சாதிய வன்கொடுமை குறித்து பேசிய அவர், சக மனிதனின் வாயில் மலத்தை திணிப்பது பைத்தியகாரத்தனத்தின் உச்சம் என கடுமையாக விமர்சித்தார்.

ஊருவிட்டு ஊரு போய் அடுத்தவர் குலதெய்வ கோவிலில் அத்துமீறி மயானபூஜை.. நள்ளிரவில் பொதுமக்கள் ஆவேசம்! ஊருவிட்டு ஊரு போய் அடுத்தவர் குலதெய்வ கோவிலில் அத்துமீறி மயானபூஜை.. நள்ளிரவில் பொதுமக்கள் ஆவேசம்!

வேலூர் குச்சிபாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சாதி மோதல்களை தூண்டுவதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டினார். கோட்சேவிற்கு ஆதரவாக மோடியின் பேச்சு இருப்பதாக கண்டனம் தெரிவித்த திருமாளவளவன், கமலுக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

English summary
VCK president Thol Thirumavalavan has condemns the cast issue in Thiruvadudurai. Protest was conducted in Chennai Valluvarkottam to condemns Thiruvadudurai cast issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X