சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வி.சி.க சார்பில் போட்டியிட நாளை முதல் 8-ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் - திருமாவளவன்

Google Oneindia Tamil News

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட நாளை முதல் மார்ச் 8 வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் குறைந்தபட்சம் 8 தொகுதிகள் கேட்டது. ஆனால் திமுக 6 தான் கொடுத்தது.

திமுக, அதிமுக கட்சிகளில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை விறுவிறுப்புடன் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

Thirumavalavan has said petitions can be submitted from tomorrow till March 8 to contest on behalf of the viduthalai siruthai katchi

முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் குறைந்தபட்சம் 8 தொகுதிகள் கேட்டது. ஆனால் திமுக 6 தான் கொடுத்தது. இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். திருமாவளவனும் கொஞ்சம் அதிபருத்தியுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட நாளை முதல் மார்ச் 8 வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

English summary
Thirumavalavan has said that petitions can be submitted from tomorrow till March 8 to contest on behalf of the viduthalai siruthai katchi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X