திருக்குறளில் ஜாதி இல்லை.. தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்.. திருமுருகன் காந்தி அதிரடி கருத்து!
திருக்குறளில் ஜாதி பற்றி எதுவும் இல்லை, தமிழர்கள் எப்போதும் ஏமாற மாட்டார்கள் என்று மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: திருக்குறளில் ஜாதி பற்றி எதுவும் இல்லை, தமிழர்கள் எப்போதும் ஏமாற மாட்டார்கள் என்று மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக கட்சியின் திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் தொடர்பாக செய்த டிவிட் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பாஜக டிவிட் செய்தது.
இதற்கு தமிழகத்தை சேர்ந்த கட்சிகள் பல எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. வள்ளுவரை பாஜக அவமானப்படுத்திவிட்டது என்று பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.
என்ன கருத்து
மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் அமைதி நிலவ கூடாது. மக்கள் இடையே கலவரம் ஏற்பட வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இங்கு வன்முறை அரசியலை கொண்டு வர பாஜக முயன்று வருகிறது.அதில் ஒரு பகுதிதான் திருவள்ளுவரை வைத்து அவர்கள் சர்ச்சையை உருவாக்குவதும்.
திருவள்ளுவர்
பாஜக திருவள்ளுவரை சொந்தம் கொண்டாட முடியாது. திருக்குறள் தமிழர்களுடைய சொத்தாக உள்ளது. அது ஒரு மத நூல் கிடையாது. அது மொத்த உலகத்திற்குமானது. அது உலகப் பொதுமறை. தமிழர்களின் அற நூலாக திருக்குறள் இருக்கிறது.
இந்துத்துவா நூல் இல்லை
ஆனால் பாஜக அதை இந்துத்துவா நூலாக மாற்ற நினைக்கிறது. திருக்குறளை ஏதோ இந்து மதத்தின் அடையாளமாக்க பாஜகவினர் முயற்சி செய்கிறார்கள். அதற்கு காவி வண்ணம் பூச முயல்கிறார்கள். திருக்குறள் மனிதனை சாதி ரீதியாக இது பிரித்து பார்க்கவில்லை.
ஜாதி இல்லை
அனைவரும் ஒன்றே என்ற கருத்தை அழுத்தமாக அனைவரும் உணர்த்தும் நூலாக திருக்குறள் இருக்கிறது. திருவள்ளுவர் தமிழர். அவருக்கு மதம் கிடையாது. தமிழர்கள் ஏமாற தயாரில்லை என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும். திருவள்ளுவர் ஒன்றும் பாஜக உறுப்பினர் கிடையாது, என்று திருமுருகன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.