தேர்தலில் தோற்கப்போகும் கட்சிக்கு யார் முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் என்ன? -திருநாவுக்கரசர்
சென்னை: தேர்தலில் தோற்கப்போகும் கட்சிக்கு யார் முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் என்ன என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் வினவியுள்ளார்.
அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமியிடம் தான் ஓ.பன்னீர்செல்வத்தை விட வசதி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அவரை முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்ததற்கான காரணம் இருக்கும் எனக் கூறினார்.
அதிமுக தொடர்ந்து 10 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி செய்து வருவதால் மக்களுக்கு ஆட்சி மீது இயல்பாகவே வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் இதனை தன்னால் கண்கூடாக பார்க்க முடிவதாகவும் திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார். மேலும், ஜெயலலிதாவே இருந்திருந்தால் கூட வரும் தேர்தலில் அவரால் முதலமைச்சராக வர முடியாது என்பது தான் யதார்த்தம் எனத் தெரிவிக்கிறார் திருநாவுக்கரசர்.
அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்காது என்றும் இதனால் ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தினால் என்ன எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தினால் என்ன அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என திருநாவுக்கரசர் எம்.பி. கூறியிருக்கிறார். இதனிடையே அதிமுகவில் இப்போது ஏற்பட்ட குழப்பமே தேவையற்ற குழப்பம் என அவர் தெரிவிக்கிறார்.
ஹத்ராஸ் போகும் வழியில் கைது செய்யப்பட்ட மலையாள பத்திரிக்கையாளர்.. உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு
இந்த விவகாரத்தில் பாஜகவின் ரோல் நிச்சயம் இருக்கும் எனக் கூறிய திருநாவுக்கரசர், நடக்காத ஒரு நிகழ்வுக்கு கற்பனை செய்துகொண்டும் கனவில் மிதந்துகொண்டும் போட்டியிட்டு வருவதாக விமர்சித்தார். திருநாவுக்கரசரை பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கே அரசியலில் சீனியர் என்பது குறிப்பிடத்தக்கது.