காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது சறுக்கல்தான் வீழ்ச்சியல்ல.. சொல்கிறார் கேஎஸ் அழகிரி!
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது சறுக்கல்தான் வீழ்ச்சியல்ல என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை காங்கிரஸ் கட்சி சந்தித்துள்ளது. இதுதொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி இன்று டெல்லி புறப்பட்டார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடையவில்லை, காங்கிரஸ்காரர்கள் தான் தோல்வி அடைந்துள்ளனர். தோல்வியை சரி செய்து மீண்டும் காங்கிரஸ் வெற்றி பெறும்.
அடித்து நொறுக்கப்பட்ட அமமுக.. தினகரனை மக்கள் கைவிட்ட பின்னணி இதுதான்?
பிரிவினையை விரும்பாத மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது சறுக்கல் தான் என்றும் வீழ்ச்சி அல்ல.
காங்கிரஸ் கட்சி சரியான பாதையில் செல்கிறது. காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தியால்தான் வழி நடத்த முடியும். காங்கிரஸ் தொண்டர்களும் அதையேதான் விரும்புகின்றனர். இவ்வாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறினார்.