3 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்க பரிந்துரை.. இந்த ஒரு புகைப்படம்தான் பிரச்சனைக்கு காரணம்!
அதிமுகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா முடிவு எடுத்தது ஏன் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
Recommended Video
சென்னை: அதிமுகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா முடிவு எடுத்தது ஏன் என்று தற்போது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதிமுகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அக்கட்சி முடிவு செய்து இருக்கிறது. அறந்தாங்கி தொகுதியின், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதியின், கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதியின் பிரபு ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
இதற்கான பரிந்துரையை அதிமுக கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் அளித்தார். இந்த தகுதி நீக்கமுடிவு குறித்து அதிமுக கொறடா ராஜேந்திரன் இன்று பேட்டி அளித்தார்.
எதிராக செயல்பாடு
அவர் தனது பேட்டியில் 3 எம்எல்ஏக்களுக்கு எதிரான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது. அறந்தாங்கி தொகுதியின், ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் தொகுதியின், கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி தொகுதியின் பிரபு ஆகியோர் அதிமுகவிற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு இருக்கிறார்கள்.
அரசுக்கு வந்த ரிப்போர்ட்டால் அதிர்ச்சி.. 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடிவு.. பிளான் என்ன?
பரிந்துரை செய்தோம்
இவர்களுக்கு எதிராக ஆதாரம் இல்லாமல் இருந்தது. தற்போது புதிய ஆதாரங்கள் கிடைத்ததால் தகுதி நீக்க பரிந்துரை செய்துள்ளோம். இவர்களுக்கு எதிரான போட்டோ ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது, என்று ராஜேந்திரன் குறிப்பிட்டு இருந்தார்.
புகைப்படம் என்ன
இந்த நிலையில் தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு மூன்று பேரும் சந்திக்கும் புகைப்படம் ஆகும் இது. இதில் இவர்கள் மூவரும் டிடிவி தினகரனுக்கு மலர்க்கொத்து கொடுத்திருந்தனர்.
அரசியல் போக்கு
இந்த புகைப்படத்தை வைத்துதான் அதிமுக கொறடா ராஜேந்திரன் தற்போது சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளார். தமிழக அரசியல் போக்கை மாற்றும் புகைப்படமாக இது மாறியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.