சரியான ஆட்டு மூளைக்காரன்.. இந்த போட்டோவைப் பார்த்தால் இனிமே இப்படி யாரையும் திட்ட மாட்டீங்க!
எருமை மாட்டின் மீது ஏறி மரக்கிளையில் உள்ள இலைகளை மேயும் ஆட்டின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
சென்னை: மரக்கிளையில் இருக்கும் இலைகளை மேய்வதற்காக எருமை மாட்டின் மீது ஏறும் ஆட்டின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
முட்டாள்தனமான காரியங்கள் செய்பவர்களை 'சரியான ஆட்டு மூளைக்காரன்' என திட்டுவது கிராமங்களில் வழக்கம். ஏனெனில் ஆடுகளுக்கு சுயமாக சிந்திக்கத் தெரியாது என்பது மக்களின் நம்பிக்கை. ஆனால் இந்த ஆட்டை பார்த்தால் நிச்சயம் அந்த எண்ணம் தவறு என்பது புரியும்.
தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ள புகைப்படத்தில் ஆடு ஒன்று, ஒரு எருமை மாடு மீது ஏறி நின்றுகொண்டு, மரக்கிளையில் உள்ள இலைகளை மேய்கிறது. அந்த ஆட்டின் புத்திசாலித்தனத்தை பார்த்து மெய்சிலிர்த்து போய் பாராட்டி வருகின்றனர் நெட்டிசன்கள்.
'விலங்குகள் நம்மைவிட எப்போதுமே புத்திசாலிகள் தான்', 'எருமை மாட்டுக்கும் ஆட்டுக்கு இடையே உள்ள நட்பை எப்படி பாராட்டினாலும் தகும்', 'அந்த மாட்டுக்கு ஏதாவது பங்கு கொடுத்ததா அந்த ஆடு ', என அந்த புகைப்படத்தின் கீழே கமெண்ட்கள் நிரம்பி வழிகின்றன. பின்னே, இப்படிப்பட்ட புத்திசாலி ஆட்டை பார்த்தால் பாராட்டாமல் இருக்க முடியுமா என்ன?