ரஜினியிடமிருந்து "ஜம்ப்" அடிச்ச நேரம் சூப்பர்தான்.. "லட்டு" போல பதவி தந்த திமுக.. "லக்கி" ஜோசப்!!
திமுகவில் தூத்துக்குடி ஜோசப்புக்கு புது பதவி தரப்பட்டுள்ளது
சென்னை: தூத்துக்குடி ஜோசப்புக்கு யோகம்தான்.. திமுகவில் அவருக்கு முக்கிய பதவி தரப்பட்டுள்ளது.. இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், திமுகவின் ஒரு தரப்பினருக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது.
ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டதால், அவரது ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்...
வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தியும் ரஜினி தன் முடிவை மாற்றி கொள்ளவில்லை. மாறாக, அரசியலுக்கு வர இயலாது என்று மறுபடியும் ஒரு காரமான அறிக்கை வெளிப்படுத்தினார்...
முதல்வர் "இப்படி" சொல்கிறார்.. உதயநிதிக்கு "டிக்கெட்" கிடைச்சிடும் போல.. அடிச்சு சொல்லும் நம்மவர்கள்
ரஜினி
அதுமட்டுமல்லாமல், மன்றத்தின் தலைமையும் அவரவர் விருப்பப்பட்ட கட்சிகளில் இணைந்து கொள்ளலாமென்றும் சொல்லிவிட்டனர். இதனால், அப்செட்டின் உச்சிக்கே போன, சில ரஜினி நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணையவும் முடிவு செய்தனர். அதன்படி ரஜினி மக்கள் மன்றத்தின் 4 மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்... இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது..
அறிவாலயம்
காரணம், ரஜினிக்கு எதிராக கருதப்பட்டது ஸ்டாலின்தான்.. அதனால்தான், ரஜினி சம்பந்தமான போஸ்டர்கள் எதுவானாலும், அதை கொண்டுபோய் அண்ணா அறிவாலயம் முன்பு ஒட்டிவிட்டு வந்தனர். இப்போது அதே அறிவாலயத்தில் ரஜினி மக்கள் மன்றத்தினர் திமுகவில் இணைந்தது பரபரப்பாக பேசப்பட்டது. அதிலும், தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த ஏ. ஜோசப் ஸ்டாலின், இணைந்தது மிக முக்கியமான பார்க்கப்பட்டது..
பொறுப்பு
இவர் தூத்துக்குடியில் செல்வாக்கானவர்.. ரொம்பவும் பிரபலம். ரஜினி மன்றத்தின் மிக மிக முக்கியமான நிர்வாகிகளில் இவரும் ஒருவர். அதனால்தான் இவருக்கு திமுகவில் இப்போது மாநில பொறுப்பு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணைச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
மவுசி
இது ரஜினி ரசிகர்களிடையே ஒரு தரப்பில் மகிழ்ச்சியையும் இன்னொரு தரப்பில் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. அதேசமயம் திமுகவில் இருக்கும் ஒருசில சீனியர்களுக்கு பொருமலும் ஏற்பட்டு வருகிறது.. மொத்தத்தில் அறிவாலயம் களை கட்டுகிறது.. திமுகவின் மவுசும் கூடுகிறது..!