5 நாட்களுக்கு இடியுடன் மழை.. இயல்புக்கு அதிகமான வியர்வை - தலை சுற்ற வைக்கும் வானிலை அறிக்கை!
சென்னை: சென்னையில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு அதிகமாக வியர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று(ஏப்.22) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை(ஏப்.23) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
வரும் ஏப்ரல் 24-ம்தேதி முதல் 26-ம் தேதி வரை தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும்.
தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் இடியுடன் மழை- வானிலை ஆய்வு மையம்
கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 சதவீதம் வரை உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும். சென்னையைப் பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். காற்றில் ஒப்பு ஈரப்பதம் உள்ளதால் பிற்பகல் முதல் காலை வரை வெக்கையாகவும், இயல்புக்கு அதிகமாக வியர்க்கும் என்று கூறியுள்ளார். (சும்மாவே அதிகமாத்தான் வேர்க்கும். இதுல, இயல்புக்கு அதிகமா வேறயா!!)