என்னை தப்பானவள் என்றுகூட சொல்லட்டும்.. ஆனால் அந்த வார்த்தையை மட்டும்.. டிக்டாக் இலக்கியா கண்ணீர்
சென்னை: "என்னை தப்பானவள் என்று கூட சொல்லிவிட்டு போகட்டும்.. ஆனால் என்னை ஏமாற்றி பிழைப்பதாக சொல்றதைதான் என்னால ஏத்துக்க முடியவில்லை... நான் ஏன் பணம் வாங்கணும்? இன்னும் எனக்கு கல்யாணம் ஆகல.. இப்பவே எனக்கு திருட்டுப் பட்டம் கட்டுவதால் தான் தற்கொலைக்கு கூட முயற்சித்தேன்" என்றுகூறி டிக்டாக் புகழ் இலக்கிய அதிர வைத்தள்ளார்.
Recommended Video
சென்னையைச் சேர்ந்தவர் ..இவருக்கு வயது 21 வயதாகிறது.. டிக்டாக்கில் கடந்த 2 ஆண்டுகளாக அதிக வீடியோக்களை பதிவிட்டு வருபவர்.. ஒரு தனியார் நிறுவனத்திலும் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் சென்னை போலீஸ கமிஷனர் அலவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில், போலி ஐடிக்களை சிலர் தன் பெயரில் உருவாக்கி, நேரலையில் தான் ஆண்களிடம் பேச பணம் பெற்று மோசடி செய்ததாக வெளியான தகவல்கள் தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், அதுகுறித்த நடவடிக்கை வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் இலக்கியா பேசும்போது, "இந்தமோசடி நடவடிக்கைகளால் நான் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.. என் பெயரில் இது வரை 10க்கும் மேற்பட்ட போலி ஐடிக்களை உருவாக்கி, ரூ.5000 பணம் வாங்கியதாக சிலர் கமெண்ட்டில் சொல்கிறார்கள்... நான் அப்படியான குடும்பத்தில் இருந்துவரவில்லை.. தப்பு செய்திருந்தால் இவ்வளவு தூரம் வந்து இங்க நிக்க வேண்டிய அவசியமே இல்லை.
நான் தப்பானவள் என்று கூட சொல்லிவிட்டு போகட்டும்.. ஆனால் என்னை ஏமாற்றி பிழைப்பதாக சொல்றதைதான் என்னால ஏத்துக்க முடியவில்லை, இன்னும் எனக்கு கல்யாணம் ஆகல.. இப்படி எனக்கு திருட்டுப் பட்டம் கட்டுவதால் தான் தற்கொலைக்கு கூட முயற்சித்தேன்.. இந்த புகார் பற்றி சைபர் க்ரைம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள். நான் யாரையும் ஏமாற்றி பணம் பறிக்கவில்லை.. என் பெயரில் போலி ஐடிக்கள் இருப்பது உண்மைதான் என்று போலீசாரே தெரிவித்துள்ளனர்.. என் பேரை சொல்லி ஏமாற்றியது யார்ன்னு எனக்கு தெரிஞ்சாகணும்" என்றனர்.