இதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா!
டிக் டாக் செய்த இளைஞர், அந்தர் பல்டி அடித்து மரணமடைந்துள்ளார்
Recommended Video
சென்னை: இதுதான் கடைசி நொடி.. இது அந்த இளைஞனுக்கோ.. சுற்றி நின்ற இளைஞர்களுக்கோ சத்தியமாக தெரியாது... அப்படியே பின்பக்கமாக அந்தர் பல்டி அடித்து கீழே விழுந்ததுமே.. உயிர் போய்விட்டது இளைஞனுக்கு!
டிக் டாக் விபரீதங்களை சொல்லி மாள முடிவதில்லை.. எவ்வளவு உயிரை காவு கொடுத்தாலும், இன்னமும், அதன் ஆபத்தின்பிடியில்தான் இளைஞர்கள் சிக்கி உள்ளனர்.. அதன் அசம்பாவிதத்தின் வசம் விழுந்து கிடக்கிறார்கள்.
இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஒரு இளைஞரும் உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு ''புள்ளீங்கோ'' என்ற பாடல் மிகவும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த பாட்டுக்காகவே புள்ளீங்கோ என்ற ஹாஷ்டேக்கையும் உருவாக்கி பலரும் தங்களுக்கு தெரிந்த வித்தைகளை சாகசங்களாக காட்டி வருகின்றனர். அப்படித்தான் ஒரு இளைஞரும் பலியாகி உள்ளார்.
எனக்கு குழந்தை பிறந்திருச்சு.. செத்துடுச்சு.. இந்த பையில்தான் மறச்சு வச்சிருக்கேன்.. அலற விட்ட மாணவி
இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி உள்ளது. தெருவில் பைக் நிற்கிறது. அந்த பைக்கில் பின்னாடி ஏறி நின்று கொள்கிறார். இதை சுற்றி இருந்த நண்பர்கள் இருக்கிறார்கள். லுங்கியை கட்டி உள்ள அந்த இளைஞர், பைக் மேல ஏறி.. "எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்" என்று வாயசைக்கிறார்.
அப்படியே பின்பக்கமாக பல்டி அடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரது தலை எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் தலையில் பலமாக மோதியது.. இதை பார்த்து நண்பர்கள் பதறிபோய் ஓடிவந்து அவரை எழுப்பினார். பேச்சு மூச்சே இல்லை.. அசைவில்லை.. தரையில் தலை பட்ட உடனேயே அப்படியே உயிர் போய்விட்டது. இந்த வீடியோ இப்போது வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.