ஜெ. மரணம்- சமாதி தர்மயுத்தம்.. கூவத்தூர் கூத்து- ஓபிஎஸ், எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் பாதை
சென்னை: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு எந்த ஒரு பரபரப்பையும் ஏற்படுத்தால் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு கடந்து வந்த பாதை...
2016 டிசம்பர் 5: சென்னை அப்பல்லோவில் ஜெயலலிதா காலமானார்
2016 டிசம்பர் 6: அதிகாலையில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது
2017 பிப்ரவரி 5: முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்.
2017 பிப்ரவரி 7: ஜெயலலிதா சமாதி முன்பு தியானம் செய்து அதிமுகவில் தர்மயுத்தத்தை தொடங்கினார் ஓ. பன்னீர்செல்வம் இதனால் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டனர்.
2017 பிப்ரவரி 9: அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தால் சசிகலா முதல்வராக பதவி ஏற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
2017 பிப்ரவரி 14: சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜெயலலிதா மறைந்ததால் அவருக்கு இத்தீர்ப்பு பொருந்தாது என அறிவிக்கப்பட்டது.
2017 பிப்ரவரி 14: அதிமுகவின் சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி கூவத்தூர் விடுதியில் சசிகலா முன்னிலையில் தேர்வு செய்யப்பட்டார்.
2017 பிப்ரவரி 15: தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக் கொண்டார்.
2017 பிப்ரவரி 15: பெங்களூரு சிறையில் சரணடைந்த சசிகலா, இளவரசி, சுதாகரன் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2017 பிப்ரவரி 18: தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும் எதிராக ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசு வென்றது.
2017 ஆகஸ்ட் 22: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாயை நீக்கக் கோரி ஆளுநரிடம் மனு கொடுத்தனர். பின்னர் புதுவை, கர்நாடகா சொகுசு விடுதிகளில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் முகாமிட்டனர்.
2017 ஆகஸ்ட் 23 : ஆளுநரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையான நிரூபிக்க உத்தரவிட கோரி மனு அளித்தார்.
2017 ஆகஸ்ட் 24: ஆளுநரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் தனபாலிடம் அரசு கொறடா ராஜேந்திரன் கோரிக்கை வைத்தார்.
2017 ஆகஸ்ட் 25: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார்.
2017 ஆகஸ்ட் 28 : தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏ களிடம் விளக்கம் கோரி சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினர்.
2017 செப்டம்பர் 12 : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார்.
2017 செப்டம்பர் 18 : தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.
2017 அக்டோபர் 13: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தினகரன் ஆதரவு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
2018 ஏப்ரல் 27: ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி, தினகரன் ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
2019 பிப்ரவரி 4: ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது சபாநாயகர் இத்தனை ஆண்டுகாலம் தாமதம் செய்ததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
2019 பிப்ரவரி 14: ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து சபாநாயகரே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறி வழக்கை முடித்து வைத்துள்ளது.