சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது- முதல் முறையாக மாணவ, மாணவியர் 100% தேர்ச்சி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இத்தேர்வில் 100% மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 27-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா லாக்டவுனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

TN 10th results to be out on today

இதனையடுத்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள், வருகை பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது..

www.tnresults.nic.in ; www.dge1.tn.nic.in ; www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கை 9,39,829. பத்தாம் வகுப்பு மாணவியர் எண்ணிக்கை 4,68,070.

இந்த தேர்வில் 100% மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத பதிவு செய்த பள்ளிகள் எண்ணிக்கை 12,690. இவற்றில் மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 7,368. உயர்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 5322. மாற்றுத் திறனாளி மாணவர்கள் மொத்த எண்ணிக்கை 6,235,

English summary
Tamilnadu 10th results will be out on Monday morning 9.30 am.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X