பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. தமிழகம் மற்றும் புதுவை 95% பேர் தேர்ச்சி!
Recommended Video
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 95% பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
கடந்த மாதம் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 11ம் வகுப்புக்கு மார்ச் 6 முதல் 22ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுக்க மொத்தம் 8.21 லட்சம் பேர் 11ம் வகுப்பு தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தல் நடக்க இருந்ததால் எப்போதும் நடப்பதை விட மிக வேகமாக 11ம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்தது. இந்த நிலையில் 11ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகி உள்ளது.
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களில் சென்று மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். எப்போதும் போல இந்த அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறப்பு தேதி ஆகியவற்றை அளித்து முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.
பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் மாணவர்கள் தங்கள் பள்ளியிலும், கல்வித்துறை அலுவலகத்திலும் இந்த முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த தேர்வில் தமிழகம் மற்றும் புதுவையில் 95% பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். 93.3% மாணவர்கள் தேர்ச்சி, 96.5% மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.