தமிழகத்தில் ஒரேநாளில் 5,890 பேருக்கு கொரோனா- 117 பேர் மரணம்; 5,556 பேர் டிஸ்சார்ஜ்
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 24 மணிநேரத்தில் 117 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரே நாளில் 5,556 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் மொத்த எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது. ஆனால் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 5890 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு 119 பேர் மரணம் என்ற நிலை இன்று சற்று குறைந்து 117 ஆக உள்ளது.
அதேபோல் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவோர் எண்ணிக்கையு கணிசமாக அதிகரித்தே வருகிறது. இன்று மட்டும் 5,,556 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார் செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,26,245 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,514 ஆகவும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,67,015 ஆகவும் இருக்கிறது. தற்போதைய நிலையில் தமிழகத்தில் மொத்தமே 53,716 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மலப்புரம் கலெக்டருக்கு கொரோனா.. கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார்
மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சென்னையில் கடந்த சில நாட்களாக 1000-க்கும் கீழாக கொரோனா பாதிப்பு இருந்து வந்தது. இன்று மீண்டும் 1,000க்கும் அதிகமாகி உள்ளது. சென்னை மாவட்டத்தில் மொத்தம் 1187 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூரில் 437 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 315 பேருக்கும் திருவள்ளூரில் 495 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
சென்னையில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 25 ஆக உள்ளது. கோவை மற்றும் திருவள்ளூரில் தலா 8 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.