சமூக நீதிக்காக போராடிய தந்தை பெரியாருக்கு வாழ்த்து சொல்வதில் தயக்கம் இல்லை- பாஜக தலைவர் எல். முருகன்
சென்னை: சமூக நீதிக்காகப் போராடிய தந்தை பெரியாருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 142வது பிறந்த நாள் இன்று எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. அதேபோல் பிரதமர் மோடியின் பிறந்த நாளை பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடுகின்றனர்.
தந்தை பெரியாரின் தாய் மொழிப் பற்றும் ஆங்கில ஆதரவும் ... பேரா. சுப. வீரபாண்டியன்
மோடி பிறந்த நாள்
சென்னையில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு 70 அடி நீள கேக் வெட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்களுக்கு ஒரு கலாசாரம்
பிரதமர் மோடியின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். நாங்கள் பிறருடைய கலாசாரம் எதனையும் மறைக்கவில்லை. எங்களுடைய கலாசாரத்தின்படியே செயல்படுகின்றோம்.
திமுக நீட் நாடகம்
நீட் தேர்வை இப்போது திமுக எதிர்க்கிறது. ஆனால் நீட் தேர்வை கொண்டு வந்த போது காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக இடம்பெற்றிருந்தது. இப்போது நீட் தேர்வை திமுக எதிர்ப்பது என்பது நாடகம்தான். 13 மாணவர்களின் உயிரோடு விளையாடியதும் திமுகதான்.
பெரியாருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
தந்தை பெரியாரைப் பொறுத்தவரையில் அவர் சமூக நீதிக்காகப் போராடியவர். அவருடைய பிறந்த நாளில் தந்தை பெரியாருக்கு வாழ்த்துகளைச் சொல்கிறோம். இதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு எல். முருகன் கூறினார்.