கோவில்கள் எதிரில் உள்ள 'கடவுளை கற்பித்தவன் முட்டாள்' கல்வெட்டுகளை அகற்றாவிட்டால்.. பாஜக எச்சரிக்கை
சென்னை: இந்து கோவில்கள் எதிரில் கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்பது போன்ற கல்வெட்டுகளை அகற்ற வேண்டும் என்று தமிழக பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் கே.எஸ். நரேந்திரன் கூறியுள்ளதாவது:
கருத்துரிமை, கருத்து சுதந்திரம் எனக் கூறி இந்து கோவில் எதிரிலேயே கடவுளை கற்பித்தவன் முட்டாள், காட்டுமிராண்டி என இந்து மத நம்பிக்கையையும், கடவுளையும் பேசி வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை உடனடியாக நீக்க வேண்டும்!
இல்லையென்றால் அதே கருத்துரிமை, கருத்து சுதந்திரம் உடைய இந்துக்களாகிய நாங்களும் தி.க. மற்றும் அதன் ஆதரவு கட்சியான திமுக கட்சித் தலைவர்களின் வீடுகள் எதிரேயும் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் ஒரு திருடன், காட்டுமிராண்டி என எழுதி கல்வெட்டுகளை வைப்போம்.
இந்துமத நம்பிக்கையையும், கடவுளையும் பேசி வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை உடனடியாக நீக்கவேண்டும்
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) November 20, 2020
இல்லையென்றால் நாங்களும் தி.க மற்றும் திமுக கட்சித்தலைவர்களின் வீடுகள் எதிரேயும் எழுதி கல்வெட்டுகள் வைப்போம்!
- மாநில துணைத்தலைவர் திரு.K.S.நரேந்திரன் pic.twitter.com/3zrELXRDpY
இவ்வாறு கே.எஸ்.நரேந்திரன் கூறியுள்ளார்.