தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் எவ்வளவு? வெளியானது பரிந்துரை
சென்னை: தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கட்டணம் எவ்வளவு வசூலிக்கலாம் என்பது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் தமிழகப் பிரிவு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையில் உள்ள கட்டண விவரங்களை பார்ப்போம்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு அரசே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு கட்டணம் எவ்வளவு வசூலிக்கலாம் என்பது குறித்து ஐஎம்ஏ தமிழகப் பிரிவு தனியார் மருத்துவமனைகளுடன் ஆலோசனைக்கு பின்னர் பரிந்துரை வெளியிட்டுள்ளது.
இதன்படி. லேசான மற்றும் மிதமான பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு 10 நாட்களுக்கு சிகிச்சை கட்டணம் ரூ.2,31,820 வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது மேலும் மிதமான கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ரூ.23000 வரை வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவர்களின் கட்டணம் அடக்கம் இல்லை.
Tamil Nadu branch of Indian Medical Association has submitted draft tariff structure for Covid-19 treatment at private hospitals. Govt decision expected soon. pic.twitter.com/p2KrXTXm28
— Shilpa Nair (@NairShilpa1308) June 4, 2020
தீவிர சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 17 நாட்களுக்கு ரூ.4,31,411 வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் படி, ஒரு நாளைக்கு தீவிர சிகிச்சை நோயாளிகளுக்கு ரூ.43000 வசூலிக்க பரிந்துரைத்துள்ளது,
மொத்தம் 11345 கொரோனா நோயாளிகள்.. வெறும் 5 மாவட்டங்களில் 10,000 பேர்.. ஷாக் புள்ளி விவரம்
Recommended Video
அனைத்து வகை கொரோனா நோயாளிகளுக்கும் தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை கட்டணத்துடன் உணவு உள்ளிட்டவற்றுக்கு தினமும் ரூ.9600 வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை தமிழக அரசின் பரிசீலனைக்கு ஐஎம்ஏ தமிழக பிரிவு அனுப்பி வைத்துள்ளது. இதை தமிழக அரசு பரிசீலித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கும் என தெரிகிறது.