ஜெ. பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் கலைமாமணி விருது 3 சவரனுக்கு பதில் 5 சவரன் பொற்பதக்கமாக வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடியார் அறிவித்துள்ளார்.
சென்னையில் 201 கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகளை இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் பேசிய முதல்வர் முக்கிய அறிவிப்புகள் சிலவற்றையும் வெளியிட்டார்.
1) கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருது 3 சவரனுக்கு பதிலாக இனி 5 சவரன் பொற்பதக்கங்களாக வழங்கப்படும்;
2) ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் தலா 5 சவரன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும்.
3) நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் நடைபெற்ற கலைமாமணி விருதுகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடிK.பழனிசாமி அவர்கள் ஆற்றிய உரை - 13.8.2019.https://t.co/pJUeXHdslG
— DIPR TN (@TNGOVDIPR) August 13, 2019
ஆகிய அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். முதல்வரின் முழு உரை விவரம்: