நிதின் கட்கரி பேசுகிறார்.. முதல்வரால் தடுக்க கூட முடியவில்லை.. மோசம்.. ஸ்டாலின் பாய்ச்சல்!
சேலம் 8 வழி சாலை திட்டத்தை கொண்டு வருவோம் என்று நிதின் கட்கரி கூறும்போதே அதை முதல்வர் பழனிச்சாமி ஏன் தடுக்கவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: சேலம் 8 வழி சாலை திட்டத்தை கொண்டு வருவோம் என்று நிதின் கட்கரி கூறும்போதே அதை முதல்வர் பழனிச்சாமி ஏன் தடுக்கவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த வாரம் சேலம் 8 வழி சாலை வழக்கில் தீர்ப்பு வந்தது. சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது, அதனால் திட்டத்திற்கு தடை விதிக்கிறோம் என்று சென்னை ஹைகோர்ட் கூறி உள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து பாஜகவின் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். இவரின் பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
வாங்க வாங்க.. ஏம்ப்பா ஸ்டூலை எடுத்து இப்படி போடுப்பா.. அசத்திய திருமா.. வியந்த நாம் தமிழர் வேட்பாளர்
நிதின் கட்கரி பிரச்சாரம்
நிதின் கட்கரி தனது பிரச்சாரத்தில் சேலம் 8 வழி சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். நீதிமன்ற தீர்ப்பு வந்தாலும், மக்களிடம் திட்டம் குறித்து பேசுவோம். மக்களிடம் பேசி திட்டத்தை கண்டிப்பாக செயல்படுத்துவோம். விவசாயிகளுக்கு போதிய இழப்பீடு கண்டிப்பாக வழங்கப்படும், என்றார்.
ஸ்டாலின் விமர்சனம்
இதை தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதில், 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்துவோம் என்று நிதின் கட்கரி கூறுகிறார். அதுவும் அவர் இதை முதல்வர், துணை முதல்வர் இருக்கும் போதே சொல்கிறார். அவர்கள் இதை குறித்து ஒன்றுமே கேட்காமல் அமைதியாக இருக்கிறார்கள்.
எதுவும் முடியவில்லை
நிதின் கட்கரியை தடுக்க கூட அவர்களால் முடியவில்லை. 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்துவோம் என நிதின் கட்கரி பேசும் போது, எடப்பாடி பழனிசாமி தடுக்காதது ஏன்?. கருணாநிதி முதல்வராக இருந்த வரை நீட் தேர்வு நடக்கவில்லை. ஆனால் அதை ஓபிஎஸ் - இபிஎஸ்தான் உள்ளே கொண்டு வந்தார்கள்.
காங்கிரஸ் ஆட்சி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த திட்டங்கள் நீக்கப்படும். காங்கிரஸ் ஆட்சி அமைத்த உடனே சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும். திமுக சேது சமுத்திர திட்டத்தில் உறுதியாக இருக்கிறது. குஜராத்தை பெரிய மாநிலமாக மாற்றினேன் என்று மோடி பொய் சொன்னார். அவர் சொன்ன ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை, என்று ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார்.