பலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்களா கிருஷ்ணர்- அர்ஜூனர்: ரஜினிக்கு தமிழக காங். கண்டனம்
Recommended Video
சென்னை: பல கோடி மக்களின் உரிமைகளைப் பறித்தவர்களா கிருஷ்ணரும் அர்ஜூனரும் என்று ரஜினிகாந்துக்கு தமிழக காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை அர்ஜூனர்- கிருஷ்ணர் என ஒப்பிட்டுப் பேசினார். இது கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கியது.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது ரஜினிகாந்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜூனருமாக இருக்க முடியும். அன்புள்ள @rajinikanth அவர்களே, தயவு செய்து மகாபாரதத்தை திரும்பவும் படியுங்கள். திரும்பவும் சரியாகப் படியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன் : திரு. @KS_Alagiri #Rajinikanth pic.twitter.com/c1o4x0Oq71
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) August 12, 2019
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், பலகோடி மக்களின் உரிமைகளை பறித்தவர்கள் எப்படி கிருஷ்ணரும், அர்ஜூனருமாக இருக்க முடியும். அன்புள்ள @rajinikanth அவர்களே, தயவு செய்து மகாபாரதத்தை திரும்பவும் படியுங்கள். திரும்பவும் சரியாகப் படியுங்கள் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதை ரீ ட்வீட் செய்துள்ள லோக்சபா எம்.பி கார்த்தி சிதம்பரம், ரஜினிகாந்த் வரலாற்றை கட்டாயம் படிக்க வேண்டும். அதுவும் 1930 முத 1945-ம் ஆண்டு காலத்திய ஜெர்மன் வரலாற்றை படிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.