தமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 5,000 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 4,496 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்தது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 5,000 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனையடுத்து கொரோனாவால் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,310 ஆகவும் உயர்ந்துள்ளது.
சென்னையில்தான் அதிகபட்சமாக 1484 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 604 பேரும் மதுரையில் 1188 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தென் தமிழகத்தை வதைக்கும் கொரோனா- மதுரை 341; தூத்துக்குடி 269; விருதுநகர் 175 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது!
கொரோனாவை வெல்வோம்-ஒரே நாளில் 5000 பேர் வீடு திரும்பினர்- நம்பிக்கை தரும் தமிழக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை
இன்று மாவட்ட வாரியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை:
- அரியலூர் 1
- செங்கல்பட்டு 604
- சென்னை- 1484
- கோவை- 68
- கடலூர்- 10
- தருமபுரி- 2
- திண்டுக்கல் - 0
- ஈரோடு -3
- கள்ளக்குறிச்சி- 147
- காஞ்சிபுரம் - 433
- கன்னியாகுமரி - 43
- கரூர்- 5
- கிருஷ்ணகிரி- 1
- மதுரை- 1188
- நாகப்பட்டினம் - 12
- நாமக்கல் - 41
- நீலகிரி - 0
- பெரம்பலூர்- 0
- புதுக்கோட்டை- 49
- ராமநாதபுரம்- 32
- ராணிப்பேட்டை- 118
- சேலம் -31
- சிவகங்கை - 27
- தென்காசி -0
- தஞ்சாவூர்- 17
- தேனி- 40
- திருப்பத்தூர்- 0
- திருவள்ளூர்- 181
- திருவண்ணாமலை- 100
- திருவாரூர் -1
- தூத்துக்குடி- 7
- நெல்லை- 33
- திருப்பூர்- 1
- திருச்சி -56
- வேலூர்- 189
- விழுப்புரம்- 43
- விருதுநகர்- 21