தமிழகம் முழுவதும் 450 டாஸ்மாக் கடை பணியாளர்கள் குடோன்களுக்கு அதிரடி இடமாற்றம்
சென்னை: தமிழகம் முழுவதும் 450 டாஸ்மாக் கடை பணியாளர்கள் குடோன்களுக்கு அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழகத்தில் பணி நேரம் குறைப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 மணி நேரமாக டாஸ்மாக் பணியாளர்கள் கடைகளை அடைத்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சென்னையில் 25 பணியாளர்கள் உள்பட தமிழகம் முழுவதும் 450 டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் அனைவரும் குடோன்களுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கொரோனாவால் இறந்த பணியாளர்கள் குடும்பத்தினருக்கு ரூ 50 லட்சம் இழப்பீடு வழங்கவும் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டம் நடத்தியதற்காக இடமாற்றம் செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என டாஸ்மாக் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாறாத பழைய பாசம்.. பாஜகவில் சேர்ந்ததை, கன்னடத்திலும் ட்வீட் செய்த அண்ணாமலை
எனவே இடமாற்ற நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.