தமிழக அரசின் அனைத்து உதவிகளையும் வீட்டிலிருந்தபடியே பெற... 1100 இலவச எண் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாடு அரசின் அனைத்து உதவிகளையும் வீட்டிலிருந்தபடியே பெற 1100 என்ற இலவச எண்ணை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் கலைவானர் அரங்கில் இன்று தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தனது உரையை தொடங்கும் முன்னரே, திமுக உறுப்பினர்கள் ஆளுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர், திமுக உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அதன் பின்னர், தனது உரையை தொடங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது தமிழ்நாடு அரசின் அனைத்து உதவிகளையும் வீட்டிலிருந்தபடியே பெற 1100 என்ற இலவச எண்ணையும் ஆளுநர் அறிவித்தார்.
1100 முதல்வரின் உதவி மைய எண்ணை அழைத்து, அரசின் சேவையை விரைவில் பெறலாம் என்றும் ஆளுநர் கூறினார். மேலும், தற்போதுள்ள அனைத்து குறைதீர்க்கும் அமைப்புகளும் முதல்வரின் உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும் அவர் குறிப்பிட்டார்