சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் மறைவு..ஸ்டாலினைத் தொடர்ந்து ஆளுநர் நேரில் ஆறுதல்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு நேரில் சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆறுதல் தெரிவித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பினார்.

TN Governor Banwarilal Purohit meets CM Edappadi Palaniswami

இதனையடுத்து இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாயின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து மாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடியின் இல்லத்துக்கு நேரில் சென்றார்.

முதல்வரின் துக்கத்தை பகிர்ந்து கொண்டு ஆறுதல் சொன்ன மு.க ஸ்டாலின் - மாறும் அரசியல் ட்ரெண்ட் முதல்வரின் துக்கத்தை பகிர்ந்து கொண்டு ஆறுதல் சொன்ன மு.க ஸ்டாலின் - மாறும் அரசியல் ட்ரெண்ட்

அங்கு முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் படத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆறுதல் கூறினார் பன்வாரிலால் புரோஹித்.

English summary
TN Governor Banwarilal Purohit paid floral tributes to a portrait of CM Edappadi Palaniswami's mother Davusayammal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X