11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்!
சென்னை: தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதலாம் என பாடத் திட்ட முறையை மாற்றி பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள்:
- 11, 12- ஆம் வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு பதில் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதலாம்.
- 600 மதிப்பெண்கள் முறையும் அமலில் இருக்கும். அதை விரும்பும் மாணவர்கள் அதனடிப்படையில் தேர்வு எழுதலாம்
- இனி 5 பாடங்கள் அடிப்படையில் 10-ம் வகுப்பைப் போலவே 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத முடியும்
- பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியல், கணிதப்பாடங்களை படிக்கலாம்.
- பொறியியல் படிக்க விரும்புவோர் உயிரியல் பாடம் படிக்க தேவை இல்லை.
- மருத்துவ படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் வேதியல், உயிரியல் பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம்.
- மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் படிக்க தேவை இல்லை
- வணிகவியல், கணக்குப் பதிவியலில் கணிணி தொழில்நுட்பப் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.