இதைதவிர வேறுவழியில்லை.. தமிழக அரசு அதிரடி.. எதற்கெல்லாம் எவ்வளவு அபராதம்.. பாருங்க
சென்னை: கொரோனா கால விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் தமிழக அரசின் அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் படி இனி தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊரடங்கில் நிறைய தளர்வு அளித்து கிட்டத்தட்ட இயல்புநிலை என்கிற அளவுக்கு நிலைமை மாறி உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் ஒவ்வொருவரும் வெளியில் செல்லும் போதும், ஒருவருக்கு ஒருவர் பேசும் போது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டியது அவசியம் ஆகும்.
அத்துடன் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்றும் கூட்டம் கூடுவது அறவே கூடாது என்றும் எச்சரித்து வருகிறது. ஆனால் அரசின் அறிவிப்புகளை பலர் காற்றில் பறக்கவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
கொரோனா சோதனை.. தெர்மல் சோதனை கருவிகள் மூலம் தோல் பாதிப்புகள் ஏற்படுமா? உண்மை என்ன?
தமிழ அரசு
இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க மக்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகள் எடுத்த அரசு இறுதியாக அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த அவசர சட்டம் கொரோனா கால விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்கிறது.
தனி மனித இடைவெளி
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் படி, பொது இடங்களில் முககவசம் (மாஸ்க்) அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.
பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
தனிமைப்படுத்துதல் விதிமுறை
பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் என்று தமிழக அரசு அரசாணையில் கூறியுள்ளது.
இதேபோல் கொரோனா தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
கடைகளுக்கு 5000 அபராதம்
தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத சலூன், ஸ்பா, கடைகள், ஜிம் ஆகியவற்றுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத தனிநபர்களுக்கு 500 ரூபாய் அபாதம் விதிக்கப்படும் என்றும், பொதுவணிக நிறுவனங்கள் அல்லது வாகனங்கள் பின்பற்றாவிட்டால் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.