தமிழகத்தில் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வா?
சென்னை: 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் 5 மற்றும் 8--ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியானது. ஆனால் தமிழக அரசு இதை திட்டவட்டமாக மறுத்தது.
அத்துடன் 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் எண்ணம் இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று 5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் மீண்டும் வெளியாகி உள்ளன.
ஆனால் இதனை ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் உறுதிப்படுத்தவில்லை. பத்தாம் வகுப்பில் மொழிப்பாட தாள்களை ஒரே தாளாக மாற்றத்தான் அரசு ஆணை பிறப்பித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
Comments
English summary
According to the reports said that Tamilnadu Govt will hold the public exams for Class 5 and 8.