சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் இன்று 5,688 பேருக்கு கொரோனா தொற்று... 66 பேர் மரணம்... 5, 516 பேர் டிஸ்சார்ஜ்..!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் பாதிப்பு தொடர்ந்து சம நிலையிலேயே இருந்து வருகிறது. இன்று மட்டும் தமிழகம் முழுவதும் 5,688 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,03,290 ஆகும். இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களும் அடங்குவர்.

Tn Health Dept Released Todays corona vulnerability detail

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 5,516 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்து பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 5,47,335 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே கொரோனா தொற்றால் இன்றைய நிலவரப்படி 46,369 பேர் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவால் பறிபோனது வேலை.. வங்கிக் கடனை செலுத்த முடியாத சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலைகொரோனாவால் பறிபோனது வேலை.. வங்கிக் கடனை செலுத்த முடியாத சாப்ட்வேர் என்ஜீனியர் தற்கொலை

கொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9, 586 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் இணை வியாதிகளுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட வாரியாக என எடுத்துக்கொண்டால் சென்னை, கோவை, செங்கல்பட்டு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாகவும் அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது.

English summary
Tn Health Dept Released Today's corona vulnerability detail
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X