எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கான மருத்துவ உதவிகளை செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளிக்கிழமையன்று அவரது உடல்நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் எஸ்.பி.பி. உடல்நலம் குணமடைய பிரார்த்திக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமது ட்விட்டர் பக்கத்தில், எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்பிபி சரணிடம் பேசினேன்.
அதே போல் எஸ்பிபி சிகிச்சை பெறும் மருத்துவமனை மருத்துவர்களிடமும் பேசினேன். எஸ்பிபியின் உடல்நிலை குறித்து இருவரிடமும் கேட்டறிந்தேன். எஸ்பிபியின் உடல்நிலை குணமடைய அரசு தரப்பில் எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கிறோம். அவர் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
மருத்துவமனையில் எஸ்.பி.பி.-மனோபாலா ட்விட்டரில் வெளியிட்ட படம்- பெரும் நம்பிக்கையில் ரசிகர்கள்
SP balasubrahmanyam: பாலு...சீக்கிரமா எழுந்துவா..உனக்காக காத்திருக்கிறேன்: இசைஞானி இளையராஜா உருக்கம்
எஸ்.பி.பி. உடல்நிலையில் முன்னேற்றம்- அச்சப்படும் நிலை இல்லை: எஸ்.பி.பி. சரண்; பிரபலங்கள் பிரார்த்தனை