சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமியார் உள்பட 4 பேருக்கு கொரோனா உறுதி
சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார், மாமியார் உள்ளிட்ட நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருப்பவர் ஜே ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ். இவர் தான் சென்னைக்கு கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாகவும் தீவிர களப்பணியாற்றி வந்தார்.
சென்னையில் கொரோனா அதிகம் பாதித்த பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு பணிகளை செய்தார். கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டார். இதையடுத்தே அவர் மீண்டும் தமிழக சுகாதாரத் துறை செயலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்..
இந்நிலையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனின் மாமனார், மாமியார் உள்ளிட்டோருக்கு அண்மையில் கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.
மாமனார், மாமியாருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, தனது குடும்பத்தினருடன் ராதாகிருஷ்ணன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் ராதாகிருஷ்ணனின் மனைவி மற்றும் மகனுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதியான நிலையில் குடும்பத்தினர் நான்கு பேரும் கிண்டியில் உள்ள கிங்ஸ் கொரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீங்கள் N-95 ரக முக கவசங்களை பயன்படுத்துகிறீர்களா? மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை
இந்த தகவலை ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் தனது டுவிட்டரில் கேள்விக்கு ஒன்றுக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். இதனிடையே, குடும்பத்தினர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தன்னைதானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தமிழக சுகாதாரத் துறை செயலாளர் குடும்பமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.