ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரத்தில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும்.. அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ராயபுரம் தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் சவால்விடுத்துள்ளார்.
Recommended Video
சென்னை ராயபுரத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதால் தான் என்னை இராயபுரம் தொகுதியில் தொடர்ந்து 5 முறை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். திமுக கட்சியின் சொத்துக்கள் கூட ஸ்டாலின் குடும்பத்திற்கு தான் போய் சேருகிறது.
ராயபுரம் தொகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் என்னை எதிர்த்து ராயபுரத்தில் போட்டியிடட்டும்..யார் வெற்றி பெறுவார் என்று மக்கள் முடிவு செய்யட்டும்.
6-வது முறையாக ராயபுரம் தொகுதி மக்கள் என்னை தான் தேர்வு செய்வார்கள். என்னை எதிர்த்து போட்டியிட்டால் தோல்வி அடைந்து விடுவோம் என்பது ஸ்டாலினுக்கு தெரியும். ராயபுரத்தில் மீண்டும் அதிமுக தான் வெற்றி பெறும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.