ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்த தமிழக எம்.பிக்கள்!
Recommended Video
சென்னை: ஒன்றாக சேர்ந்து குரல் கொடுத்தால் எதுவுமே சாத்தியம் என்பதை இந்தி- ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்து இன்று தமிழக எம்.பி.க்கள் நிரூபித்திருக்கின்றனர்.
தபால்துறை அண்மையில் பல்வேறு பணி இடங்களுக்கு போட்டித் தேர்வை நடத்தியது. பொதுவாக இத்தேர்வு பிராந்திய மொழிகளில் நடத்தப்படும்.
இம்முறை திடீரென இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இது மிகப் பெரும் சர்ச்சையானது.
முடிவுகளை வெளியிட தடை
இது தொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டன. இத்தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்தது. இந்நிலையில் 989 தபால்துறை ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை துறைசார் தேர்வை நடத்தியது.
கொந்தளித்த தமிழகம்
இத்தேர்விலும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில்தான் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தேர்வுகள் ரத்து
தமிழக எம்.பி.க்களின் தொடர் எதிர்ப்பால் தற்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்ட தபால்துறை தேர்வை ரத்து செயதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல் தமிழக நலன் சார்ந்த பிரச்சனைகளில் அனைத்து கட்சி எம்.பி.க்களும் ஒன்றாக குரல் கொடுத்தால் 'உண்டு வாழ்வு' என்பது நிரூபணமாகும்.
தேர்வுகள் ரத்து
தமிழக எம்.பி.க்களின் தொடர் எதிர்ப்பால் தற்போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்ட தபால்துறை தேர்வை ரத்து செயதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல் தமிழக நலன் சார்ந்த பிரச்சனைகளில் அனைத்து கட்சி எம்.பி.க்களும் ஒன்றாக குரல் கொடுத்தால் 'உண்டு வாழ்வு' என்பது நிரூபணமாகும்.