எங்க "அம்மா" இருக்காங்கடா.. யாராச்சும் மேல கை வைங்க பார்ப்போம்.. பெண்களுக்கு உற்சாகம் தந்த "பட்ரோல்"
அம்மா பேட்ரோல் வாகன சேவையை முதல்வர் இன்று தொடக்கி வைத்தார்
சென்னை: ஒரு பொண்ணு மேலயும் இனி ஒருத்தரும் கை வெச்சிட முடியாது.. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காகவே அம்மா பேட்ரோல் பிங்க் வண்டி சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்து இருக்கிறார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பல வகைகளில் தமிழக அரசு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, 181 இலவசத் தொலைபேசி சேவை, ஒன் ஸ்டாப் சென்டர் போன்ற பிரிவுகளை, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் இவைகளை எல்லாம் அந்தந்த மாவட்ட மகளிர் ஸ்டேஷனுடன் இணைத்து செயல்பட்டும் வருகிறது.
அந்த வகையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு பிங்க் நிற ரோந்து வாகனம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு இது உருவாக்கப்பட்ட இருக்கிறது. அம்மா பேட்ரோல் என்ற பெயரில் இந்த இனோவா கார்கள் இனிமேல் செயல்பட போகிறது. இதன் முதற்கட்ட 20 பிங்க் வண்டிகளின் சேவையைதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.
குறிப்பாக, பெண் போலீசாருக்கு என தனியாக 45 அதிநவீன சொகுசு ரோந்து வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பிங்க் வண்டி.. ஜெயலலிதாவை நினைவில் கொள்ளும் வகையில் ''அம்மா பேட்ரோல்'' என்ற பெயரில் அறிமுகம் ஆகி உள்ளது. குழந்தைகளுக்காக 1098 என்ற ஹெல்ப்லைன் எண்ணும், பெண்களுக்காக 1091 என்ற எண்ணும் இந்த வாகனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது.
குழந்தைகள் பெண்கள் மட்டுமில்லை.. வயசானவர்களுக்கும் இந்த திட்டம் உதவும். பெரிய அளவு கொடூரங்களை நடக்க விடாமல் மட்டுமில்லை.. யாராவது பெண்களை கேலி செய்தாலே போதும்.. அதிரடியாக களத்தில் இறங்கி தடுப்பதுதான் இந்த பிங்க் முக்கிய வேலை. சென்னைக்கு பிறகு மற்ற மாவட்டங்களிலும் படிப்படியாக இந்த பிங்க் வண்டி வர போகிறது. என்றாலும், பெண், குழந்தைகளின் பாதுகாப்புக்கு உறுதி செய்யும் வகையில் எடப்பாடி அரசு எடுத்து வரும் முயற்சிகள் மக்களை கவர்ந்து வருகின்றன.