சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அனுமதியின்றி சர்கார் பேனர் வைத்ததாக நடவடிக்கை.. 54 விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு!

தமிழகம் முழுக்க அனுமதியின்றி சர்கார் பேனர் வைத்ததாக 54 விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சர்கார் பேனர் வைத்ததாக 54 விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு!- வீடியோ

    சென்னை: தமிழகம் முழுக்க அனுமதியின்றி சர்கார் பேனர் வைத்ததாக 54 விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

    இந்தியா முழுக்க தற்போது சர்கார் படம் வைரல் ஆகியுள்ளது. அதிமுகவினரின் எதிர்ப்பு காரணமாக படம் பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

    தீபாவளியன்று விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் வெளியானது. இந்த படத்தில் நிறைய அரசியல் தொடர்பான காட்சிகள் உள்ளது.

    'சர்கார்' சட்டம் 49 பிக்கும், தேர்தல் விதி 49 பிக்கும் என்ன வித்தியாசம்! 'சர்கார்' சட்டம் 49 பிக்கும், தேர்தல் விதி 49 பிக்கும் என்ன வித்தியாசம்!

    நீக்க சொன்னார்கள்

    நீக்க சொன்னார்கள்

    இந்த காட்சிகள் அதிமுகவினரை கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இதனால் சர்கார் படத்திற்கு அதிமுக போராடி வருகிறது. இந்தநிலையில், சென்னையில் உள்ள பல தியேட்டர்கள் முன் இருக்கும் சர்கார் பட பேனர்கள் கட்டாயப்படுத்தி அகற்றப்படுகிறது. சில தியேட்டர்களுக்கு கடும் போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    வழக்கு பதிவு

    வழக்கு பதிவு

    இந்த நிலையில் போலீஸ் இதில் இன்னொரு விதமான நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அதன்படி, முறைகேடாக அனுமதியின்றி பேனர் வைத்ததாக விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. முக்கியமான தியேட்டர்கள் முன் இருக்கும் பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறி போலீஸ் வழக்கு பதிவு செய்து வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    சர்கார் பேனர் தொடர்பாக இதுவரை விஜய் ரசிகர்கள் 56 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி பேனர் வைத்ததாக தஞ்சாவூரில் 25 விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் 21 விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் 10 விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பெரும் கொந்தளிப்பு

    பெரும் கொந்தளிப்பு

    இந்த விவகாரம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வேண்டுமென்றே பழிவாங்கும் விதமாக விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கிறது என்று ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மேலும் சர்கார் பேனர்களை கிழித்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

    English summary
    TN police filed a case against 54 Vijay fans on Sarkar banners issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X