தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா- ஒரே நாளில் 88 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மொத்தம் 6,972 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு மொத்தம் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 6,000-த்தை தாண்டியதாக உள்ளது. இன்று ஒரேநாளில் 6,972 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டோர் எண்ணிகை 2,27,688 ஆக உயர்ந்தது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4,707 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,66,956 ஆகும். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 88 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3,659 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் மகிழ்ச்சி- 3 மாதத்தில் முதல் முறையாக ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 700 ஆக குறைந்தது
சென்னையில் 1,107 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 96438 ஆகும்.