விண்ணில் அதிசயம்.. நெருப்பு வளைய சூரிய கிரகணம்- 3 மணிநேரம் நீடித்தது
Recommended Video
சென்னை: விண்ணில் அரிதான சூரிய கிரகணம் இன்று காலை 8.06 மணிக்கு தொடங்கி பகல் 11.16 வரை சுமார் 3 மணிநேரம் நீடித்தது. இதனை பலரும் கண்டு மகிழ்ந்தனர்.
சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருவதால் சூரிய கிரகணம் நிகழ்ந்தது. சூரிய கிரகணம் இன்று நிகழ்வதையொட்டி பல இடங்களில் கோவில்கள் நடைசாத்தப்பட்டு பின்னர் திறக்கப்பட்டன.
ஒடிஷா மாநிலத்தில் அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரிய சூரிய கிரகணத்தை சாதாரண கண்களில் பார்க்கக் கூடாது என மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் அறிவுறுத்தி இருந்தனர்.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது!
தெளிவாக தெரிந்த கிரகணம்
தமிழகத்தில் சென்னை, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் சூரிய கிரணகம் தெளிவாக தெரிந்தது. கர்நாடகா, கேரளாவில் இந்த அரிய சூரிய கிரகணத்தை காண முடிந்தது.
விண்ணில் 3 மணிநேரம் நீடிப்பு
இன்று காலை 8.06 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி முற்பகல் 11.06 மணிக்கு நிறைவடைந்தது. விண்ணில் சுமார் 3 மணிநேரம் இந்த சூரிய கிரகணம் நீடித்தது.
பிர்லா கோளரங்கில் ஏற்பாடு
இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க சென்னை பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக 3 தொலைநோக்கிகள் வைக்கப்பட்டிருந்தன.
சென்னை பெசன்ட்நகர்
இதனை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் காலை முதலே பிர்லா கோளரங்கில் குவிந்திருந்தனர். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அடுத்தது 2031-ல்தான்
பொதுவாக சாதாரண கண்ணாடிகளைப் பயன்படுத்தி இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்கக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. இதற்கு அடுத்த சூரிய கிரகணம் 2031-ல்தான் ஏற்படும்.