கொடைக்கானலில் சரசரவென சரிந்த வெப்பநிலை.. தொடங்கியது உறைபனி காலம்.. சென்னையிலும் குளிருமாம்!
தமிழகத்தில் தற்போது உறைபனி காலம் துவங்கி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தற்போது உறைபனி காலம் துவங்கி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நல்ல மழையை கொடுத்தது. டிசம்பர் இறுதியில் முடிய வேண்டிய பருவமழை நேற்று நிறைவு பெற்றது.
இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யாது. அதே சமயம் தமிழகத்தில் பனி அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2020ம் ஆண்டில் முக்கியமான நிகழ்வு.. வருகிறது ஓநாய் சந்திரகிரகணம்.. வானத்தில் இன்று நடக்கும் அதிசயம்
Recommended Video
பனி
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உறைபனிக் காலம் தொடங்கி உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கொடைக்கானலில் இதனால் அதிக அளவில் குளிரான வானிலை நிலவு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று மழை
நேற்று மழை பெய்தது. அங்கு பெய்த மழையால் குளிர் சற்று குறைந்திருந்த நிலையில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. நேற்று கொடைக்கானல் ஏரிச்சாலையின் பல்வேறு பகுதிகளில் இன்று உறை பனி ஏற்பட்டது. இந்த மாதம் முழுக்க ஊட்டி, கொடைக்கானலில் உரை பனி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் எப்படி
இதனால் அங்கு மட்டுமின்றி தமிழகம் முழுக்க வெப்பநிலை வேகமாக குறையும். சென்னையிலும் குளிரான வானிலை காணப்படும். மாலை 6 மணியில் இருந்தே சென்னையில் குளிரான வானிலை காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொடைக்கானல் எப்படி
இந்த நிலையில் கொடைக்கானலில் நேற்று வெப்பநிலை 6 டிகிரி ஃபாரன்ஹீட ஆக பதிவானது. இதனால் அங்கு மக்கள் குளிரில் நடுங்கினார்கள். இது இந்த வாரம் மேலும் குறையும் என்று எதிபார்க்கப்படுகிறது . இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது .