அரை நிர்வாண கோலத்தில்.. ஆம்னி பஸ்ஸுக்குள்.. ஆண் நண்பருடன்.. பெண் அரசியல்வாதி டீப் டிஸ்கஷன்!
ஆம்னி பஸ்ஸுக்குள் ஆண் நண்பருடன் பெண் அரசியல்வாதி ஒருவர் பிடிபட்டா
சென்னை: அரை நிர்வாண கோலத்தில்.. ஆம்னி பஸ்ஸுக்குள்.. ஆண் நண்பருடன் பெண் அரசியல்வாதி ஒருவர் கையும் களவுமாக பிடிபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.
முன்புபோல் சாதாரண பஸ்கள் இல்லாமல், இப்போது ஆம்னி பஸ்கள் பெருக தொடங்கிவிட்டன. அதிலும் ஏசி பஸ் என்றால் சொல்லவே தேவையில்லை. மெத்தை, ஸ்க்ரீன், உட்பட ஏகபோக வசதிகளை கொண்டு உள்ளது. இது பயணிகளுக்கு சவுகரியத்தை தந்தாலும், ஒருசிலர் அநாகரீக காரியங்களிலும் இறங்கிவிடுகின்றனர்.
பஸ்ஸுக்குள்ளேயே விபச்சாரம் நடப்பதாக நிறைய புகார்களும் போலீசாருக்கு வந்த வண்ணம் உள்ளன. அதனால் ஆம்னி பஸ்கள் மீது நம் போலீசாரும் ஒரு கண் வைத்து அடிக்கடி தடாலடி சோதனைகளை நடத்தி, குற்றசெயல்களை குறைத்து வருகின்றனர்.
இதோ மண்ணுக்கு அடியில்தான் ஒளிச்சு வச்சிருக்கேன்.. சுட்டி காட்டிய முருகன்.. நகையை அள்ளிய போலீஸ்!
அந்த வகையில், பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஒரு ஆம்னி பஸ் வந்துள்ளது. பிரதமரும், சீன அதிபரும் இங்கு வந்திருந்ததால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடந்து வந்ததால், சோதனையும் தீவிரமானது. அப்படித்தான் வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ்ஸை போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது அந்த பஸ்ஸின் கடைசி சீட்டில் ஒரு பெண் தமிழக அரசியல்வாதி இருந்திருக்கிறார். இவர் அடிக்கடி சோஷியல் மீடியாவில் உடல், உரிமை குறித்து நிறைய வீடியோக்களை வெளியிடும் பெண் என்கிறார்கள். 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணுடன் அரை நிர்வாண கோலத்தில் இருந்திருக்கிறார். செம போதையிலும் அந்த பெண் அரசியல்வாதி இருப்பதை கண்டு போலீசார் அதிர்ந்துள்ளனர்.
எனினும் 2 பேரையுமே அங்கேயே இறங்க செய்து, அந்த பஸ்ஸை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், பெரிய புள்ளி அரசியல்வாதிகளிடம் டக் டக்கன போனில் பேசி, ஆண் நண்பரை அழைத்துக் கொண்டு அசால்ட்டாக வெளியே வந்துவிட்டாராம்.