சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமித் ஷாவுக்கு பயப்படுகிற ஆள் நாங்க இல்லை... எல்.முருகன் கற்பனை உலகில் வாழ்கிறார் -கே.எஸ்.அழகிரி

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டு அஞ்சுகிற ஆள் தாங்கள் இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

வரும் 21-ம் தேதி அமித் ஷா சென்னை வருகை தரவுள்ள நிலையில் அவரது வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை உண்டாக்கும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி அமித்ஷாவை கண்டு தாங்கள் ஏன் அஞ்சப்போகிறோம் என வினவினார்.

Tncc president K.S.Azhagiri says, We are not afraid of Amit Shah

ஜனநாயக நாட்டியில் யாரும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை என்றும் அப்படியிருக்க எல்.முருகன் ஏன் அப்படிக் கூறினார் எனத் தெரியவில்லை என்றார். மேலும், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கற்பனை உலகில் வாழ்ந்து வருவதாகவும் அவர் நிஜ உலகிற்கு மாறிவர வேண்டும் எனவும் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

அரசுப் பேருந்தை ஆட்டையை போட முயன்ற போதை ஆசாமி... 1 கி.மீ.துரத்திச் சென்று மடக்கிப் பிடிப்பு..!அரசுப் பேருந்தை ஆட்டையை போட முயன்ற போதை ஆசாமி... 1 கி.மீ.துரத்திச் சென்று மடக்கிப் பிடிப்பு..!

அமித்ஷா சென்னைக்கு வரும் போது கையில் என்ன துப்பாக்கியுடனா வருகிறார் அவரைக் கண்டு நாங்கள் பயப்பட என கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்மண்ணில் அமித்ஷாவை பார்த்து யாரும் பயப்படமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

English summary
Tncc president K.S.Azhagiri says, We are not afraid of Amit Shah
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X