சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் இன்று 5,175 பேருக்கு கொரோனா உறுதி... ஒரே நாளில் 112 பேர் மரணம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5175 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேநேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 6031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இது ஆரோக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. அண்மைக்காலமாக பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விரைவில் தொற்று பாதிப்பு தமிழகம் மீளும் என்ற நம்பிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 59,156 பேருக்கு 61,166 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதேபோல் இதுவரை 28,45,406 பேருக்கு 29,53,56 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 5175 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து...முந்திக் கொண்டதா ரஷ்யா... இந்தியா பேச்சுவார்த்தை!! கொரோனா தடுப்பு மருந்து...முந்திக் கொண்டதா ரஷ்யா... இந்தியா பேச்சுவார்த்தை!!

6031 பேர் டிஸ்சார்ஜ்

6031 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,031 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,14,815 பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்புடன் 54184 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். சென்னையில் தான் இன்று மிக அதிகமாக 997 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 112 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 25 பேரும், கடலூரில் 9 பேரும், செங்கல்பட்டில் 7 பேரும், தேனியில் 7 பேரும், வேலூரில் 7 பேரும், மதுரை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் தலா 6 பேரும், கோவையில் 5 பேரும் இன்று கொரோனாவால் பலியாகி உள்ளனர். ,

சென்னை நிலவரம்

சென்னை நிலவரம்

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் இன்று 1044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தான் மிக அதிகபட்சமாக 25 ஒரே நாளில் பலியாகி உள்ளனர். சென்னையில் தற்போது கொரோனா பாதிப்புடன் 11811 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 90966 பேர் இதுவரை சென்னையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

திருவள்ளூரில் 472 பேர்

திருவள்ளூரில் 472 பேர்

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் இன்று 487 பேருக்கும், திருவள்ளூரில் 472 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 342 பேருக்கும், தூத்துக்குடியில் 311 பேருக்கும், தேனியில் 278 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூரில் 179 பேருக்கும், கடலூரில் 170 பேருக்கும், கன்னியாகுமரியில் 175 பேருக்கும், கோவையில் 112 பேருக்கும், மதுரையில் 106 பேருக்கும், புதுக்கோட்டையில் 150 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

English summary
Today 5,175 covid 19 positive cases in tamil nadu. 112 cases died. chennai highest death today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X