தமிழகத்தில் இன்று முழு முடக்கம் அமல்.. கறி இல்லை.. காய்கறியும் இல்லை.. பெட்ரோல் பங்க்கும் இயங்காது!
சென்னை: தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அமலாகிறது. இன்றைய தினம் காய்கறி கடைகள் இயங்காது. பெட்ரோல் பங்க்கும் இயங்காது.
தமிழகத்தில் கொரனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் ஏற்கெனவே சென்னை, திருவள்ளூர் , செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் மதுரையில் மேலும் 7 நாட்களுககு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் தளர்வுகளும் கட்டுப்பாடுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அமலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு.. விழிபிதுங்கும் போல்சோனேரோ அரசு
அதாவதுபால், மருந்து, மருத்துவ சேவைகளை தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை. இன்று காய்கறி, மளிகை பொருட்களின் கடைகள் இயங்காது. அது போல் நள்ளிரவு 12 மணி முதல் இன்று 12 மணி வரை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள் வெறிச் சோடி காணப்படுகின்றன. இன்று முழு முடக்கம் என்பதால் நேற்றைய தினமே கடைகளில் பொருட்களை வாங்கி வைக்க கூட்டம் அலை மோதியது.