இன்று உலக பிரியாணி தினம்.. ஆஹா கடைகளில் அலைமோதும் கூட்டம்.. பாஸ்! பீஸ் பெரிசா வைங்கனு அக்கப்போர்!
சென்னை: இன்று உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அசைவ ஹோட்டல்களில் கூட்டம் அலைமோதுகிறது.
பிரியாணி, ஆஹா, வெஜிட்டபிள் பிரியாணி என்றாலே நமக்கு எச்சில் ஊறுகிறது. அதே அசைவ பிரியாணிகளான சிக்கன், மட்டன், இறால், மீன் என்றால் கேட்க வேண்டுமா.
புகுந்து விளையாட வேண்டியதுதான். மிகவும் வாசனை மிக்க உணவு பிரியாணி, இந்த உணவை அசைவம், சைவம் என இரு வகைகளாக சமைக்கலாம். சைவம் என்றால் வெஜிட்டபிள், பன்னீர், மஸ்ரூம் பிரியாணி உள்ளிட்டவை கிடைக்கும்.
கொரோனாவைவிட மிகப் பெரிய துன்பங்களிலிருந்து தப்பிய வரலாறு திருமணமான ஆண்களுக்கு உண்டு.. கஸ்தூரி கலாய்!
சிக்கன் பிரியாணி
இதே அசைவ பிரியாணி என்றால் அது வேற லெவல், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, மீன் பிரியாணி, நண்டு பிரியாணி என பல வகைகள் உண்டு. இதில் பிரியாணி ஒன்றுதான், ஆனால் மற்ற அசைவ வகைகள் தனித்தனியே சேர்த்து ஹோட்டல்களில் பரிமாறப்படுகிறது.
சிக்கன் பிரியாணி
இதே அசைவ பிரியாணி என்றால் அது வேற லெவல், சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, இறால் பிரியாணி, மீன் பிரியாணி, நண்டு பிரியாணி என பல வகைகள் உண்டு. இதில் பிரியாணி ஒன்றுதான், ஆனால் மற்ற அசைவ வகைகள் தனித்தனியே சேர்த்து ஹோட்டல்களில் பரிமாறப்படுகிறது.
மட்டன்
எனினும் சிக்கன் போல் மட்டன் இருக்காது. மட்டன் போல் மீன் இருக்காது, மீன் போல் இறால் இருக்காது, இறால் போல் நண்டு இருக்காது. இவ்வாறாக சுவை என்பது மாறுபடும். தினமும் பிரியாணி சாப்பிட்டாலும் சளைப்பதில்லை. பிரியாணி என்றாலே அதன் வாசம்தான்.
பிரியாணி
அந்த மசாலாக்களின் வாசம் அதிகமாகவும் இருக்கக் கூடாது, குறைவாகவும் இருக்கக் கூடாது. சிலருக்கு பாஸ்மதி அரிசியில் செய்யும் பிரியாணி பிடிக்கும். சிலருக்கு ஜீரக சம்பா அரிசியில் செய்யும் பிரியாணிதான் பிடிக்கும். இந்த நிலையில் இன்று உலக பிரியாணிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
#WATCH Karnataka: People queue up at an eatery in Hoskote to buy biryani.
— ANI (@ANI) October 11, 2020
A customer says, "I came here at 4 am, but got my order at 6:30 am, as there's a long queue of about 1.5 km for biryani. The food is too delicious, it's worth the wait." pic.twitter.com/ThiT3zmEM6
பிரியர்கள்
இதனால் பிரியாணி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. புரட்டாசி மாதமாக இருந்தாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரியாணி பிரியர்கள் புகுந்து விளையாடுகிறார்கள். இதனால் சுவைமிக்க கடைகளில் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்து கிலோ கணக்கில் வாங்கிச் செல்கிறார்கள். டபரா காலியாக காலியாக சுடச்சுட பிரியாணி வந்து இறங்குகிறது.