இந்த மாவட்டங்களில் எல்லாம் இடி மின்னலோடு மழை வெளுக்கப் போகுது - எச்சரிக்கும் வானிலை
தென் மேற்கு பருவமழை கேரளாவில் பெய்து வருவதாலும், தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று
சென்னை: தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப்பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்குச்சுழற்றி காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் பகலில் வெயிலும் மாலை நேரங்களில் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. இரவு நேரங்களில் திடீரென மழை கொட்டித்தீர்க்கிறது.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும். அடுத்த இரண்டு நாட்களுக்கு விழுப்புரம், கடலூர், நாகப்பட்டிணம்,புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லா நினா வருது தென்மேற்குப் பருவமழை ஜோரா பெய்யப்போகுது - நல்ல செய்தி சொன்ன வானிலை
சென்னையை பொருத்தவரையில் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யும். அதிக பட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 8 மணி நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டம் காரையாரில் அதிகபட்சமாக 13 செமீ மழை பதிவாகியுள்ளது. ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சியில் 11 செமீ மழை பதிவாகியுள்ளது. திருச்சி, கரூர், மதுரையில் தலா 10 செமீ மழை பதிவாகியுள்ளது.