சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா.. தொடர்ந்து 7ஆவது நாளாக அதிகரிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,152 பேராக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 31-ஆம் தேதி முதல் தமிழகத்தில் தொடர்ந்து 7ஆவது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000-த்தை தாண்டியுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட இன்றைய நிலவரங்களில் தமிழகத்தில் மேலும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30,152 பேராக உள்ளது.

 சுடுகாட்டிலேயே இடமில்லை.. சுற்றிலும் சடலங்கள்.. நிமிஷத்துக்கு ஒருவர் பலி.. கொரோனா பிடியில் பிரேசில் சுடுகாட்டிலேயே இடமில்லை.. சுற்றிலும் சடலங்கள்.. நிமிஷத்துக்கு ஒருவர் பலி.. கொரோனா பிடியில் பிரேசில்

தமிழகம்

தமிழகம்

மருத்துவமனைகளில் 13,503 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,423 ஆகும். மற்ற நாடுகள், மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்களில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரயில்

ரயில்

விமானம் மூலம் சவுதி அரேபியாவிலிருந்து வந்த 5 பேருக்கும் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து வந்த ஒருவருக்கும் கர்நாடகாவிலிருந்து வந்த 3 பேருக்கும் டெல்லியிலிருந்து வந்த ஒருவருக்கும் அந்தமான் நிகோபாரிலிருந்து வந்த ஒருவருக்கும் மகாராஷ்டிராவிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பரவியது. அது போல் சாலை மார்க்கமாகவும் ரயில் மார்க்கமாகவும் மகாராஷ்டிரத்திலிருந்து வந்த 12 பேருக்கும் கேரளாவிலிருந்து வந்த 3 பேருக்கும், குஜராத்திலிருந்து வந்த ஒருவருக்கும், பீகாரிலிருந்து வந்த ஒருவருக்கும், புதுவையிலிருந்து வந்த ஒருவருக்கும் ஆந்திராவிலிருந்து வந்த இருவருக்கும் டெல்லியிலிருந்து வந்த 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா சோதனை

கொரோனா சோதனை

இன்று மட்டும் 16,022 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதுவரை 5,76,695 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. சென்னையில் ஒரே நாளில் 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 20,993 பேர் ஆகும். இன்று தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களில் ஆண்கள் 874 பேரும், பெண்கள் 584 பேரும் அடங்குவர்.

கொரோனா பலி

கொரோனா பலி

இன்று மட்டும் 633 பேர் மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 16,395 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 251 ஆகும். செங்கல்பட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,719 ஆகும். திருவள்ளூரில் 1,274 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Total number of cases tested positive in Tamilnadu is 1,458. Death toll in today goes to 19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X