ஒரே நாளில் 68 பேர் மரணம்.. தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பலியானவர்கள்.. முழு விவரம்
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் மிக அதிகபட்சமாக சென்னையில் 32 பேர் கொரோனாவால் நேற்று உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மற்றும் மதுரையில் தலா 5 பேர் உயிரிழந்தனர். விருதுநகர் மற்றும் செங்கல்பட்டில் 4 பேரும், காஞ்சிபுரம் மற்றும் தூத்துக்குடியில் 3 பேரும், தேனியில் 2 பேரும் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர். திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 4244 பேர் பாதிப்பு.. சென்னையில் ஆச்சர்ய மாற்றம்!
தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் எத்தனை பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம். உயிரிழந்தவர்கள் விவரம் அடைப்புக்குறிக்குள்
- அரியலூர் 497 (1)
- செங்கல்பட்டு 7635 (158)
- சென்னை 74969 (1253)
- கோவை 1071 (9)
- கடலூர் 1493 (6)
- தர்மபுரி 224 (1)
- திண்டுக்கல் 750 (8)
- ஈரோடு 327 (7)
- கள்ளக்குறிச்சி 1621 (6)
- காஞ்சிபுரம் 3099 (49)
- கன்னியாகுமரி 1070 (6)
- கரூர் 190 (4)
- கிருஷ்ணகிரி 225 (4)
- மதுரை 5482 (116)
- நாகப்பட்டினம் 347 (1)
- நாமக்கல் 150 (1)
- நீலகிரி 181 (1)
- பெரம்பலூர் 172 (1)
- புதுக்கோட்டை 534 (8)
- ராமநாதபுரம் 1691 (34)
- ராணிப்பேட்டை 1415 (13)
- சேலம் 1630 (7)
- சிவகங்கை 720 (11)
- தென்காசி 598 (1)
- தஞ்சாவூர் 625 (6)
- தேனி 1495 (18)
- திருப்பத்தூர் 379 (1)
- திருவள்ளூர் 6075 (127)
- திருவண்ணாமலை 2861 (22)
- திருவாரூர் 681 (1)
- தூத்துக்குடி 1949 (14)
- திருநெல்வேலி 1551 (11)
- திருப்பூர் 288 (2)
- திருச்சி 1273 (16)
- வேலூர் 2486 (6)
- விழுப்புரம் 1411 (19)
- விருதுநகர் 1738 (16)
- விமான நிலைய கண்காணிப்பில் 534 (1)
(வெளிநாடு)
- விமான நிலைய கண்காணிப்பில் 402 (0)
(உள்நாடு)
- ரயில் நிலைய கண்காணிப்பில்: 432 (0)
Comments
English summary
tamilnadu 68covid deaths today and 1,966 deaths till date, district wise details here