அடுத்த வீக் எண்ட் மகாபலிபுரம் போற பிளான் இருக்குதா? அப்போ இந்த நியூஸ் உங்களுக்குதான்
சென்னை: அடுத்த வீக் என்ட், மகாபலிபுரம் பக்கம் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால், அதை நீங்கள் மறுபரிசீலனை செய்துகொள்ளுங்கள் மக்களே.
வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி கொண்டாட்டங்கள் களைகட்ட உள்ளன. இதன்பிறகு, வீக் என்ட்டான வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, பக்கத்தில் மாமல்லபுரத்திற்கு, ஒரு குட்டி ட்ரிப் அடிக்கலாம் என சென்னை மற்றும் புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் ஏதாவது பிளான் வைத்திருப்பீர்கள்.
அப்படி பிளான் இருந்தால், மாற்றிக்கொள்ளுங்கள். ஏனெனில், மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜிஜன்பிங் சந்தித்துப் பேசும் நிகழ்ச்சி அக்டோபர் 11ம் தேதி நடைபெற உள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வரும் அக்டோபா் 11ம் தேதி முதல் அக்டோபா் 13ம் தேதி வரை இருவரும் தங்கி இரு நாடுகளிடையிலான பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனா்.
மூன்று நாட்களுமே, இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் என்பதால் இந்த நாட்களில் மாமல்லபுரத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள்தான் இதன் பின்னணியாம். எனவே, டூர் பிளானை அதற்கடுத்த வீக் என்டுக்கு மாற்றிக்கோங்களேன்.