Chennai: சென்னை அருகே.. வங்கக் கடலில் நிலநடுக்கம்.. 10 கி.மீட்டர் ஆழத்தில்!
Recommended Video
சென்னை: சென்னை அருகே வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை சில பகுதிகளில் உள்ள மக்கள் உணர்ந்தனர்.
சென்னையில் திநகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
சென்னையிலிருந்து 609 கி.மீட்டர் தொலைவில் வங்கக் கடலுக்குள் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் கொண்டு இருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு 4.9 ரிக்டர் அளவில் இருந்துள்ளது. இதனால் எந்தவித உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. அதுபோல் மீண்டும் இன்று காலை 6.55 மணிக்கும் இதுபோல் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
Parts of #Chennai felt mild tremors due to a 4.9 Intensity #earthquake in Bay of Bengal about 600 kms E/Ne of Chennai around 7 AM https://t.co/XBFtkyzlsd #COMK pic.twitter.com/ZUKrPI4Ob1
— Chennairains (@ChennaiRains) February 12, 2019